பருத்தித்துறையில் தீ பரவல் – இருவர் உயிரிழப்பு..!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தீ விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழிலுக்கு பயன்படுத்தும் ரெஜிபோர்ம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை களஞ்சியப்படுத்தும் இடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த களஞ்சியசாலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த உடபுஸ்ஸலாவை – லோமன்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version