மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்..!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்பை மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறுகோரி இன்று காலை முதல் கடையடைப்பு போராட்டத்தினை மேற்கொள்வதற்கு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

வணிக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள் சந்தை வியாபாரிகள் அனைவரும் இதற்கான ஆதரவை தெரிவித்துள்ளன.

குறித்த மதுபானசாலையினால் மக்கள் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்; உடுப்பிட்டி சந்தியில் இருந்து கண்டன போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும்;போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

Social Share

Leave a Reply