JN 1 புதிய கோவிட் திரிபு தொடர்பில் அவதானம்!

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு தொற்றாளரும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா தோற்று காலத்தில் பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பதிவாகிவரும் புதிய JN1 கோவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், இது குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்தும் அவதானித்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version