நீர்கொழும்பு பகுதியில் விபத்து – சிறுமி பலி!

நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (04.01) ஹலவத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ​​மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த சம்பவம் இடமொபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மகள் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version