ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் பாதிப்பு

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையும் பாதிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் A320/321 வகை விமானங்களுக்கு குறுந்தூர பயணங்களுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என்றும்இ அதற்கான எரிபொருளை கொழும்பில் மாத்திரமே நிரப்பிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்பதுடன் அஜித் நிவாட் கப்ராலின் திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகின்றன எனவும் ஹர்ச டி சில்வா தொடர்ந்தும்; குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version