நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் போதைக்கு அடிமையான 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 45 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின்போது பின்வரும் 227 கிராம் ஹெராயின், 168 கிராம் ஐஸ், 8 கிலோ 40 கிராம் கஞ்சா, 13,892 கஞ்சா செடிகள், 227 கிராம் மாவா மற்றும் 647 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.