இலங்கை தொடரில் சம்பியனானது SSC

சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (16.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு சின்ஹலீஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் SSC அணி 71 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சம்பியனாகியுள்ளது.

நூணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய SSC அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. இதில் கிரிஷான் சன்ஜுல 84(125) ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க ஆட்டமிழக்காமல் 36(43) ஓட்டங்களையும், ஷெவோன் டானியல் 35(58) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர, துஷான் விமுக்தி, சமிக்கார எதிரிசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தரிந்து ரத்னாயக்க, ப்ரொமோட் மதுவந்த ஆகியோர் தலா ஓவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய செபாஸ்டியன் அணி 42 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. இதில் சமிக்கார எதிரிசிங்க 37(76) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 3 விக்கெட்களையும், ஜிஷான் பாலசூரிய, நுவனிது பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், நிசல தரக, தனுஷ்க குணதிலக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version