அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்

இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன லசந்த பெரேரா, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.

எனினும் அவரது அடையாளத்தில் ஏற்பட்ட பிரச்சினையால், மரபணு பரிசோதனை மூலம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த இந்திய அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் அவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கொட லொக்கா அடையாளம் காணப்பட்டார்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version