நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு…!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டு ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பல நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்படவுள்ளதுடன் புதிய கூட்டத் தொடரின் பின்னர், ஜனாதிபதியினால் அதற்கான உறுப்பினர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version