இலங்கை கிரிக்கட் மீதான தடை நீக்கம்..!

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் இடைநிறுத்தம் எதிர்வரும் சில நாட்களில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை முழுமையாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version