பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள்கள் பல சுகயீன விடுமுறை..!

அரச நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

சம்பள முரண்பாடுகளை தீர்த்தல், அடிப்படை சம்பளத்தை உயர்த்துதல் மற்றும் அதிகரித்துள்ள வரிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி அரச பொறியியலாளர் சங்கம், ஆயுர்வேத உத்தியோகத்தர் சங்கம், கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம், கட்டட நிபுணர்கள் சங்கம், உள்நாட்டு வருமானவரி தொழிற்சங்க ஒன்றியம், கணக்காளர் சேவைகள் சங்கம் உட்பட 17 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தோர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ஒன்றிணைந்த அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள்; கொழும்பில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version