வெற்றிடமான சனத் நிஷாந்தவின் அமைச்சுப் பதவிக்கு புதிய நியமனம்..!

நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய சனத் நிஷாந்தவின் மறைவையடுத்து வெற்றிடமான பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version