சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் விசேட சந்திப்பு..!

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சில் நண்பகல் 12 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version