கடந்த 24 மணித்தியாலங்களில் 625 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 625 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவு பட்டியலில் இருந்த 80 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 160 கிராம் ஹெரோயின், 152 கிராம் ஐஸ், 10 கிலோ 745 கிராம் கஞ்சா, 34,237 கஞ்சா செடிகள், 31 கிராம் மாவா, 683 போதை மாத்திரைகள், 226 கிராம் தூள், 264 கிராம் மதன மோதகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version