போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 500க்கும் மேற்பட்டோர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 680 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவு பெயர் பட்டியலில் இருந்த 126 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 680 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 168 கிராம் ஹெரோயின், 93 கிராம் ஐஸ் 925 கிராம், 925 கிராம் கஞ்சா, 1,044 கஞ்சா செடிகள், 596 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version