விவசாய மாநாடு ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள 42 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

குறித்த மாநாடு எதிர்வரும் 22ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

35 நாடுகளை சேர்ந்த விவசாய அமைச்சர்கள் மற்றும் பதில் அமைச்சர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ டோங்யு உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version