சட்டவிரோத மசாஜ் நிலையம் – மூவர் கைது..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓயா நகரில் சட்டவிரோத மசாஜ் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

எவ்வித பதிவும் இன்றி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையத்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

குறித்த நிலையத்தின் முகாமையாளர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply