இஸ்ரேயல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலி!

உதவிக்காக தவித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 760 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பாலஸ்தீனிய மக்கள் மத்தியில் ஹமாஸ் போராளிகள் இருந்ததால் அவர்கள் குழுவை நோக்கி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலியப் படைகள் தெரிவித்துள்ளதுடன்,
இஸ்ரேல் கண்மூடித்தனமாக பொதுமக்களைக் கொன்றதாக பாலஸ்தீன நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version