சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு வர்த்தக கண்காட்சியொன்று கல்லடி பழைய பாலத்தில் முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்த்துவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இயங்கி வரும் சூர்யா பெண்கள் அபிவிருத்தி அமைப்பினரால் குறித்த இரண்டு நாள் வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் கலந்துகொண்டு வர்த்தக கண்காட்சியினை திறந்துவைத்து நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
குறித்த வர்த்தக கண்காட்சியானது சூரிய பெண்கள் அமைப்பின் கீழ் இயங்கும் சுய தொழில் முயற்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், இவ் வர்த்தக கண்காட்சியானது இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.