இரு சிறுவர்களை மரப்பலகையால் அடித்து கொலை..!

இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் இருவர் மரப்பலகையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சிறுவர்களின் உறவினரான பெண் ஒருவரே இருவரையும் இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நேற்று(19) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது, பூஜா என்ற பெண் 3 வயதான அபி மற்றும் 6 வயதான லக்கி இருவரையும் அடித்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சம்பவத்தின் பின்னர் அவர் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உத்திரப் பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version