வடமாகாண விவசாயிகளுக்கு மின்சார கட்டண திருத்தம்…

வடமாகாணத்தில் விவசாயத்திற்காக மின்சாரத்தை பயன்படுத்தும் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்து பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும் பகுதியை வடக்கு, கிழக்கு மாகாண ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version