பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – சீனப் பிரஜைகள் ஐவர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சீன பொறியியலாளர்கள்,பேரணியாக சென்றுள்ளனர்.

இதன்போது தற்கொலை குண்டுதாரி வாகனத்தின் மீது மோதியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சம்வபவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version