அமெரிக்காவின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள 2.5 கிலோ மீட்டர் நீளமான பாலம் ஒன்றின் மீது மோதியதில், குறித்த பாலம் இடிந்து விழுந்தது.
அந்நாட்டு நேரப்படி நேற்று(26) நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாலத்துடன் மோதுவதற்கு முன்னர் அந்த கப்பலில் மின்சார கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும் அபாய உதவி அழைப்பை, விடுத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட ‘டாலி’ எனப்படும் குறித்த சரக்கு கப்பல் இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.