மைத்திரியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் முன்வைப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் குறித்த விடயங்களை நீதிமன்றத்தில் இன்று(27) முன்வைக்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்திற்கு அழைத்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த 25ம் திகதி அவர் வழங்கிய வாக்குமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நேற்று(26) அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில், மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை தனக்கு தெரியும் என வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version