மதுபானத்தின் விலை குறைக்கப்படும் என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானத்தின் விலையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களத்திற்கு எவ்வித ஆலோசனைகளும் வழங்கப்படவில்லை என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்களுக்கான வரியை திருத்தம் செய்வதன் ஊடாக மதுபானத்தின் விலை குறைக்கப்படுவதாக வெளியான செய்தி பொய்யானது என மதுவரித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.