தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, தந்தை மகனை கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமொன்றில் பதிவாகியுள்ளது.
தொலைபேசியில் சத்தமாகப் பேசுவது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து தந்தை மகனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
கடந்த 25ம் திகதி இந்த சம்பவம் பதிவாகியதாகவும், சம்பவத்தின் போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(26) உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற போது இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட தந்தையான ராம்ராவ் கக்டே எனும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.