பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அதனை ஏற்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மறுத்துள்ளது.
இந்த அதிகரிப்பு ஊக்குவிப்புத் தொகை என்றும் அது ஒருபோதும் சம்பளம் உயர்வாக கருதப்படாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்