தென்னாப்பிரிக்காவில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி

யாத்திரைக்கு சென்றதாக தகவல்

தென்னாப்பிரிக்காவின் வட மாகாணமான லிம்போபோவில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு யாத்திரைக்கு சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பஸ்ஸில் சாரதி உள்ளிட்ட 46 பேர் பயணித்த நிலையில், 8 வயது சிறுமி ஒருவர் மாத்திரமே உயிர் பிழைத்துள்ளார்.

குறித்த சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version