கடும் வறட்சி – பத்தாயிரம் பேர் பாதிப்பு

நிலவும் வறட்சி காரணமாக இலங்கையில் 3,027 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டம் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 7,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் மேலும் 2,813 பேர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னாகவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply