ரயிலில் மோதி பேராதனை பல்கலைக்கழக மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

களுபாலமவிற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

முதுகலைப் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தல்பிட்டிய வடக்கு, வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version