இலங்கைக்கு கண்டனம் வெளியிட்ட சர்வதேச மன்னிப்பு சபை 

இலங்கையில் அமைதி முறையில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 

2022 மார்ச் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை நேரடி விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை உடனடியாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை , சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version