5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா – தொடரும் மும்பை அணியின் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மும்பையின் சொந்த மைதானத்தில் இன்று(11) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பெங்களூரு அணி சார்பில் டியு பிளசிஸ் 61 ஓட்டங்களையும், தினேஷ் கார்திக் 53 ஓட்டங்களையும் மற்றும் ராஜட் பட்டிதர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.  

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால் ம்றறும் ஷ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர். 

197 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

இதன்படி, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது. 

மும்பை அணி சார்பில் இஷான் கிஷன் 69 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 52 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 38 ஓட்டங்களையும் மற்றும் ஹட்ரிக் பாண்டியா 21 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜயகுமார் வைஷாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர்.  

போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக மும்பை அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 7ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், பெங்களூரு அணி தொடர்ந்தும் 9ம் இடத்தில் காணப்படுகின்றது. 

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நாளைய(12) போட்டியில் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

குறித்த போட்டி லக்னோவ் மைதானத்தில் நாளை(12) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply