ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  

பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் போது, ஏனைய கட்சிகளுடன் உடன்படிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு கட்சியின் ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version