மதீச பத்திரனவின் பந்துவீச்சில் வென்றது சென்னை..!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மும்பையில் இன்று(14) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி சார்பில் அணி தலைவர் ருத்துராஜ் 69 ஓட்டங்களையும், சிவம் துபே 66 ஓட்டங்களையும் மற்றும் தோனி 4 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர் 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் ஹட்ரிக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர். 

207 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி, 20 ஓவர்களில்  விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

இதன்படி, இந்த போட்டியில் சென்னை அணி 20 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 

மும்பை அணி சார்பில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும், திலக் வர்மா 31 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா  இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 2வது சதத்தினை இன்று பதிவுசெய்தார். 

சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் மதீச பத்திரன 4 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர். 

போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின்  மதீச பத்திரன தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய சென்னை அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து 3ம் இடத்திலும், மும்பை அணி 4 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும் உள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(15) போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

பெங்களூரில் நாளை(15) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply