“தமிழ் மக்கள் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்” -சாணக்கியன்  

இந்த வருடத்தில் தமிழ் மக்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

இவ்வருடம் தேர்தல்கள் நிறைந்த வருடங்களாக இருக்க கூடும் என்றும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான  வாய்ப்புக்கள்  காணப்படுவதாகவும் சாணக்கியன் நேற்று(14) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தில் தமிழ் மக்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக தமிழ் இனம் சார்ந்து, இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையிலான  தீர்மானங்களை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். 

Social Share

Leave a Reply