யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதிவாகிய கொரோனா மரணம்..!யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.  

யாழ்ப்பாணத்தை சேர்ந்த  62 வயதுடைய பெண் ஒருவரே  கொரோனா தொற்றினால்  உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கொள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று(15) கிடைக்கப்பெற்ற நிலையில், கொரோனா தொற்றினால்  மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை  கண்டறிவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply