குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை இன்று(17) முதல் அமுலுக்கு வரவுள்ளது.
மேலும், புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
