இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தினரால் கொழும்பு, பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் இன்று(24.04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொல்துவ சுற்று வட்டத்தை அண்மித்த பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவொரு வீதியையும் மறித்து போராட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையை மீறும் பட்சத்தில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.