சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

மீள் திருத்த பெறுபேறுகள் எதிர்வரும் மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு முன்னர் வெளியிடப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(26.04) உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version