ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு
நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைத்தரவுள்ளார்.
இதன்படி, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அவர் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன
மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும்
மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும்
கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version