ஜூன் மாதம் கிடைக்கவுள்ள 2ம் தவணை கடன் தொகை

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் தொகை ஜூன் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாகவும், இந்த மீளாய்விற்கமைய ஊழியர்மட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை எனவும் அனுராதபுரத்தில் இன்று(27.04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு சில நிபந்தைகள் முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளதுடன் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது முக்கியமாகும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version