மஹிந்த சிறிவர்தனவுக்கு சேவை நீடிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக முன்னர் கடமையாற்றிய சிறிவர்தன, கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்த்தைகளுக்கு சிறிவர்தனவின் பங்களிப்புகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் கடன்
மறுசீரமைப்பு செயற்பாடுகள் போன்றன சேவை நீடிப்புக்கான காரணம் என ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Social Share

Leave a Reply