நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறையை
அறிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் விடுத்துள்ள
அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கு போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் போன்றன வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக
அதன் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.