சட்டவிரோத பணத்தில் கொழும்பில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு, கொழும்பில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததமை தொடர்பில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.