சனிக்கிழமையும் திறக்கப்படவுள்ள ஆட்பதிவுத் திணைக்களம் 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை(04.05) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உட்பட காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள மாகாண அலுவலகங்கள் நாளை(04.05) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாத்திரம் திறக்கப்படவுள்ளது.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுள், இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து www.drp.gov.lk உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version