கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று(06.05) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். 

கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜெகத் சந்திரலால் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கிராம சேவகர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும அவர் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நாளையும்(07.05) தொடரவுள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version