இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை விழ்ச்சி பதிவாக கூடிய சத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மட்டக்களப்பு கொழும்பு காலி யாழ்ப்பாணம் கண்டி இரத்தினபுரி மற்றும் திருவோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் வேளையில் மழையுடன் வானிலை நிலவு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.