இரத்தினபுரியில் மீண்டும் பெருந்தோட்டத் தொழிலாளர் மீது தாக்குதல் 

ஓய்வு பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரை, தோட்டத்தின் பிரதி முகாமையாளர் தாக்கியுள்ள சம்பவமொன்று இரத்தினபுரி – ஹேயஸ் பெருந்தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது.

காணிப் பிரச்சினையின் காரணமாக நேற்றைய தினம்(17.05) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தாக்குதலுக்கு இலக்காகிய நபர் கொலன்ன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி மக்கள் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர், இரத்தினபுரி தும்பறை 82ம் இலக்க பெருந்தோட்டப் பகுதியிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருவர் தோட்ட பிரதி முகாமையாளரால் தாக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில்,  இரத்தினபுரி – ஹேயஸ் பெருந்தோட்டப் பகுதியிலும் இத்தகைய தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version