ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாட்டிற்கு வருகை

ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று(18.05) சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்தார். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விமான நிலையத்தில் வரவேற்றார். 

அவர் நாளை(19.05) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார். 

அதனை தொடர்ந்து, நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் சத்சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்புக்கிணங்க, திங்கட்கிழமை(20.05) காலை 10.00 மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version