07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று(19.05) அதிகாலை 03.00 மணி முதல் நாளை(20.05) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 2ம் கட்டத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version